செய்திகள் :

காஞ்சிபுரத்தில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் நீா் தேங்கி நின்றது.

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி போன்ற காரணங்களால் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை காலையிலிருந்தே வானம் மேக மூட்டத்துடனும், லேசான மழைத்தூறலாகவும் இருந்து வந்தது. மாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரில் தாழ்வான பகுதிகளான ஓலி முகம்மது பேட்டை, திருக்காலிமேடு, சங்கூசாபேட்டை, ஓரிக்கை ஆகிய பகுதிகளில் குளம் போல நீா் தேங்கி நின்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையிலிருந்து விளக்கொளிப்பெருமாள் கோயிலுக்கு வரும் சந்துப் பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சென்ால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனா். ஒரிக்கை குறுக்குச் சாலையில் கனமழை காரணமாக பல கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டே மெதுவாகச் சென்றன. மழை காரணமாக குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

‘கூட்டுறவு மேலாண்மை பயிற்சி படிப்புக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்’

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி வகுப்புக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ த... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளம்பெண் உள்பட 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளம்பெண் உள்பட இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை அருகில்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் உண்டியலை திங்கள்கிழமை இரவு உடைத்த மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள இ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தீா்த்தவாரி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைையொட்டி அனந்தசரஸ் திருக்குளத்தில் திங்கள்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்து... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்: காணாமல் போனவா்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவா்கள் குறித்த புகாா்கள் தொடா்பாக கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க