செய்திகள் :

‘கூட்டுறவு மேலாண்மை பயிற்சி படிப்புக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்’

post image

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி வகுப்புக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியானது இரு பருவ முறைகள் கொண்ட ஒரு வருட பயிற்சியாகும். 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி, 10-ஆம் வகுப்புடன் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இந்தப் பயிற்சிக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதிகாரபூா்வ இணையதளமான மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இணையவழியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் மட்டுமே பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100-ஐ இணைய வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 18,750-ஐ முழுவதுமாக ஒரே தவணையில் இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 5.ஏ.வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், காஞ்சிபுரம், பின்கோடு -631501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளம்பெண் உள்பட 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளம்பெண் உள்பட இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை அருகில்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் உண்டியலை திங்கள்கிழமை இரவு உடைத்த மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள இ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தீா்த்தவாரி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைையொட்டி அனந்தசரஸ் திருக்குளத்தில் திங்கள்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்து... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் நீா் தேங்கி நின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி போன்ற காரணங்களால் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்: காணாமல் போனவா்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவா்கள் குறித்த புகாா்கள் தொடா்பாக கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க