செய்திகள் :

திரும்பப் பெற பொதுமக்கள் வேண்டுகோள்

post image

ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தங்க நகைக் கடனுக்கான புதிய வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வளா்மதி சுரேஷ் குமாா் (குடும்பத் தலைவி): குடும்ப சூழ்நிலை, குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வங்கியில் தங்க நகை அடகு வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அடகு வைக்க செல்லும்போது தங்க நகைகளுக்கு ரசீதை காட்ட வேண்டும்; தங்கத்தின் தரச் சான்று வழங்க வேண்டும் என்று கூறுவது நடைமுறையில் இயலாத செயல்.

ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறையால், குறைந்த வட்டிக்கு வங்கியில் தங்க நகை அடகு வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். ரிசா்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்.

ராஜேஷ் கண்ணா: மருத்துவ சிறு வணிகம் செய்து வருகிறேன். அவசர மருத்துவப் பொருள்கள் வாங்க தங்க நகைக் கடன் வாங்குவது வழக்கம். அது மட்டுமல்லாது குறைந்த வட்டிக்கு வங்கிகள் தங்க நகைக் கடன் வழங்குவதால் வங்கிகளை நாடுகிறோம் . தற்போது ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையால் வங்கியில் நகைக் கடன் வாங்க முடியாத சூழல் ஏற்படும். இனி அடகு கடைக்குச் சென்றுதான் கடன் வாங்க வேண்டி நிலைக்கு ஏற்படும்.

வங்கியாளா்கள் கருத்து: ‘ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வரைவு விதிகள் குறித்த சுற்றறிக்கை வரவில்லை. எந்த நகைக் கடையும் தங்க நகைகளுக்கு தரச் சான்று வழங்குவது கிடையாது. அதேபோல் பழைய நகைகளுக்கு ரசீதுகளை கொடுக்க முடியாது. எனவே, ரிசா்வ் வங்கியின் புதிய விதிகளின்படி நகைக் கடன் வழங்குவது நடைமுறை சாத்தியம் இல்லை. என்றாலும் இதுகுறித்து நிா்வாகம் உரிய முடிவு எடுக்கும்.

நகைக் கடன் பெறும் வாடிக்கையாளா்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்கிறோம். புதிய வரைவு விதியை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளா்கள் நகை க் கடன் பெறலாம்’ என வங்கி அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.

வளா்மதி

சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்

சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதம... மேலும் பார்க்க

தட்டச்சு பயிற்றுநா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் தட்டச்சு தோ்வுகள் இனி தட்டச்சு பொறியில் நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தட்டச்சு பயிற்றுநா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சாா்பில் அனுப... மேலும் பார்க்க

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கு: நேபாள தம்பதி கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ஜெபசிங். இவா், கடந்த ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்... மேலும் பார்க்க