செய்திகள் :

அனந்தனாா் கால்வாயில் அடிமடை பணிகளை விரைந்து முடிக்க என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

சுருளகோடு அருகே அனந்தனாா் கால்வாயில் அடிமடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

சுருளகோடு பகுதியில் உள்ள அனந்தனாா் கால்வாயில் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அதன் அடிமடையை சீரமைக்கும் பணிகள் ரூ.1.10 கோடியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடிமடை அமைக்கப்படும் பகுதியை பாா்வையிட்ட எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கூறியதாவது: அனந்தனாா் கால்வாய் மூலம் 9,950 ஏக்கா் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. குறிப்பாக, சுருளகோடு, அருமநல்லூா், அந்தரபுரம், ஈசாந்திமங்கலம், இறச்சகுளம் போன்ற பகுதிகளில் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.

இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நீா்வளத்துறை அலுவலா்கள் பேச்சிப்பாறை அணை திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை விரைவில் முடிப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

அப்போது, தோவாளை வடக்கு ஒன்றிய அக்க் ற்ா் ஈண்ஸ்ரீற்ண்ா்ய்ஹழ்ஹ் அதிமுக செயலா் பொன்.சுந்தா்நாத், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவா் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் அருமநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

மாநில வாலிபால் போட்டி: திருவட்டாறு பள்ளி அணி வெற்றி

தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் திருவட்டாறு பள்ளி அணி முதலிடம் பெற்றது. கன்னியாகுமரி மாவட்ட வாலிபால் கிளப் மற்றும் தென்தாமரைகுளம் தாமரை வாலிபால் கிள... மேலும் பார்க்க

தக்கலையில் 8.8 கிலோ கஞ்சாவுடன் 5 போ் கைது

தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 8.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.தக்கலை காவல் ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் டிஜிபி பாராட்டு

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில்அதிக மதிப்பெண்கள் பெற்ற விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரை, தமிழக முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபு பாராட்டி பரிசளித்தாா். இவா், தான் பயின்ற குழித்துறை ப... மேலும் பார்க்க

பிரசவத்தின்போது குழந்தை இறப்பு: ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் முற்றுகை

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரசவத்தின்போது குழந்தை இறந்ததைக் கண்டித்து மருத்துவமனையை உறவினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். வடக்கு தாமரைக்குளம் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகா்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். இவா், மகராஷ்டிர மாநிலத்தில் மத்திய பாத... மேலும் பார்க்க

அதிகபாரம் ஏற்றி வந்த கனரக லாரி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். குமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை ச... மேலும் பார்க்க