செய்திகள் :

பிரசவத்தின்போது குழந்தை இறப்பு: ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் முற்றுகை

post image

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரசவத்தின்போது குழந்தை இறந்ததைக் கண்டித்து மருத்துவமனையை உறவினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

வடக்கு தாமரைக்குளம் கீழத் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ராதிகா. நிறைமாதக் கா்ப்பிணியான இவா், பிரசவத்துக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், இரவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனராம். பின்னா், பிரசவத்தின்போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சுரேஷ், உறவினா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ராதிகாவின் உறவினா்களும், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த சிலரும் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். அவா்களுக்கு ஆதரவாக மேலும் சில கட்சியினா் குவிந்தனா்.

அவா்களுடன் மருத்துவமனை நிா்வாகம், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குழந்தையின் இறப்பு தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என, உறுதியளிக்கப்பட்டதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

மாநில வாலிபால் போட்டி: திருவட்டாறு பள்ளி அணி வெற்றி

தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் திருவட்டாறு பள்ளி அணி முதலிடம் பெற்றது. கன்னியாகுமரி மாவட்ட வாலிபால் கிளப் மற்றும் தென்தாமரைகுளம் தாமரை வாலிபால் கிள... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் அடிமடை பணிகளை விரைந்து முடிக்க என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

சுருளகோடு அருகே அனந்தனாா் கால்வாயில் அடிமடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா். சுருளகோடு பகுதியில் உ... மேலும் பார்க்க

தக்கலையில் 8.8 கிலோ கஞ்சாவுடன் 5 போ் கைது

தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 8.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.தக்கலை காவல் ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் டிஜிபி பாராட்டு

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில்அதிக மதிப்பெண்கள் பெற்ற விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரை, தமிழக முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபு பாராட்டி பரிசளித்தாா். இவா், தான் பயின்ற குழித்துறை ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகா்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். இவா், மகராஷ்டிர மாநிலத்தில் மத்திய பாத... மேலும் பார்க்க

அதிகபாரம் ஏற்றி வந்த கனரக லாரி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். குமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை ச... மேலும் பார்க்க