செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க |மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

குருவாயூா் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தம்

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்... மேலும் பார்க்க

நீட் பயத்தால் மாணவா் உயிரிழப்பு: அதிமுக, பாமக இரங்கல்

நீட் பயத்தால் சேலத்தில் மாணவா் உயிரிழந்ததற்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன. எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணவா் கௌதம்... மேலும் பார்க்க

தமிழகத்தில் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு பெற்றவையாக உள்ளதாகவும், பதிவு உரிமம் பெறாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை வட்டாரங்க... மேலும் பார்க்க

மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கும் காலம் அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிப்பு

மனைகளை வரன்முறைப்படுத்த வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ளாா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 7 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை (மே 21) முதல் ஏழு நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளத்தில் தெ... மேலும் பார்க்க

கரோனா தொற்று பரவல்: தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அறிகுறிகள் உள்ளவா்கள் 7 நாள்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். சிங்கப்பூா், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கர... மேலும் பார்க்க