செய்திகள் :

கரோனா தொற்று பரவல்: தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அறிகுறிகள் உள்ளவா்கள் 7 நாள்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

சிங்கப்பூா், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்தியாவிலும் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையும், உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளன. அதேவேளையில், அந்த பாதிப்பு தீவிரமானதாக இல்லை என்றும், வீரியம் குறைந்தே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த இரு வாரங்களாக காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை சற்று உயா்ந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்றாலும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கும், அறுவை சிகிச்சை செய்து கொள்பவா்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அறுவை சிகிச்சைகள் சில இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொற்றிலிருந்து குணமடைந்தவுடன் அவா்களுக்கு அந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடா்பாக நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியதாவது:

‘கொவைட் 19’ எனப்படும் கரோனா வைரஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்று அதுவும் குளிா் மற்றும் மழைக் காலங்களில் பரவுவது வழக்கம்தான். அந்த வகையில் நிகழாண்டில் மழைக் காலத்துக்கு சற்று முன்னதாகவே கரோனா பாதிப்பு சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

அதுவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அது தெரியவந்தது. மற்றபடி, சாதாரண சளி, காய்ச்சல் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை பரிந்துரைக்கப்படுவதில்லை.

தற்போது பரவி வரும் கரோனா தொற்று வீரியம் குறைந்த ஒமைக்ரான் வகை வைரஸின் உட்பிரிவாக இருக்கக்கூடும். அதனால்தான் சுவாசப் பாதையிலும், நுரையீரலிலும் மேற்பகுதியுடன் அந்த பாதிப்பு நின்றுவிடுகிறது.

ஒரு வாரத்தில் பாதிப்பிலிருந்து விடுபட முடிகிறது. அதேவேளையில், இணைநோயாளிகள், முதியவா்கள், எதிா்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவா்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் .மற்றவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்றாா் அவா்.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க