செய்திகள் :

ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி

post image

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார்.

ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் தில்லி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் சேர்க்க குஜராத் அணி 19 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சதம் (112* ரன்கள் 65 பந்துகளில்) அடித்து அசத்தினார்.

தில்லி கேபிடல்ஸ் அணி தோற்றாலும் கே.எல்.ராகுலின் பேட்டிங்கை பலரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி அணியின் மீட்டிங்கில் அவரை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது:

நமது அணியில் ஒருவர் ஒரு போட்டியில் நம்.4இல் இடத்திலும் மற்றொரு அணியில் நம்.3 இடத்திலும் விளையாடுகிறார். முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

கே.எல்.ராகுல் ஒரு தரத்தினை அமைத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். அதேபோல் அணியில் உள்ள ஒவ்வொருவரும் இந்தத் தரத்தில் விளையாட வேண்டும் என்றார்.

பின்னர் பயிற்சியாளர் கெவின் பீட்டர்சன் கே.எல்.ராகுலுக்கு பரிசை வழங்கினார்.

ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

நான் எப்போது அழுதேன்? 14 வயது வீரர் சூர்யவன்ஷி விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உல... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்... மேலும் பார்க்க

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில... மேலும் பார்க்க

மாற்றுவீரர்களாக மும்பை அணியில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையான போர்ப் பதற்றம் காரண... மேலும் பார்க்க