செய்திகள் :

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

post image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாகத் தேர்வான பி.ஆர். கவாய், கடந்த 17ஆம் தேதி முதல்முறையாக தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்திற்குச் சென்றுள்ளார்.

தலைநகரான மும்பைக்குச் சென்றபோது அவரை வரவேற்க அரசுத் தரப்பில் இருந்து மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறைத் தலைவர், மும்பை காவல் ஆணையர் என யாரும் வரவில்லை. ஆனால், இவர்கள் அனைவரும் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை வரவேற்க வேண்டும் என்பது நடைமுறை.

மும்பை நகரிலுள்ள தாதர் பகுதியில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்டு கவாய் பேசினார். இச்சம்பவம் வழக்குரைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதி கவாய், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், புத்த மதத்தைத் தழுவியர் என்பதாலும் அவருக்கு அரசுத் தரப்பில் உரிய மரியாதையுடன் கூடிய அழைப்பு தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைமை நீதிபதியை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு முதல்முறை மகாராஷ்டிரத்திற்கு வந்த பி.ஆர். கவாய்க்கு மும்பை விமான நிலையத்தில், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் மற்றும் மும்பை காவல் துறை ஆணையர் ஆகியோர் உரிய முறையில் வரவேற்பு அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதிப்புக்குரிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உரிய மரியாதை அளிக்காத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நெறிமுறைகள் தவறியதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் கோரிக்கை வைத்துக்கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க