ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது.
ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 43 ரன்கள் குவித்தார்.
பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணியை டெவால்டு பிரெவிஸ், ஷிவம் துபே இணைந்து மீட்டார்கள்.
அதிலும் குறிப்பாக டெவால்டு பிரீவிஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் ரன்களை எடுத்தது.
கடைசி 3 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யுத்வீர் சிங், ஆகாஷ் மெத்வால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
இரண்டு அணிகளுமே பிளே ஆப்ஸுக்கு தகுதி பெறாமல் இருப்பதால் யார் கடைசி இடத்துக்குச் செல்லாமல் இருப்பார்கள் என்ற போட்டியே நிலவுகிறது.