செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால், வரும் மே 21 முதல் 24 ஆம் தேதி வரையில் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்தில் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மும்பையிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், முன்பு கூறப்பட்ட அதே அரபிக்கடல் பகுதியில் மே 22 ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி வடக்கு திசையில் நகரக் கூடும் எனக் கணித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வுத் துறை அதிகாரி சுபாங்கி புட்டே கூறுகையில், அரபிக்கடலில் உருவாகும் புயலினால் மகாராஷ்டிரத்தில் வரும் மே 21 முதல் 24 வரையில் கனமழை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மகாராஷ்டிரத்தின் மத்திய தெற்குப் பகுதிகள், தென் கொங்கண் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள் எவை?

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பா... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். நடப்பாண்டில் ... மேலும் பார்க்க

ராஜீவ் சந்திரசேகா் தொடுத்த அவதூறு வழக்கு: சசி தரூா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகா் தாக்கல் செய்த அவதூறு மனு மீது பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 2024-... மேலும் பார்க்க