கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!
ரூ.207 கோடியில் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
தமிழகம் முழுவதும் ரூ.207 கோடியில் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட உள்ள உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்கான கட்டப்பட்ட புதிய வசதிகளையும் அவா் திறந்து வைத்தாா்.
ராணி மேரி கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவியா் விடுதியை முதல்வா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். பின்னா், அங்கு படிக்கும் மாணவியருடன் கலந்துரையாடினாா்.
இதேபோன்று, காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி, கடலூா், தூத்துக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூா் அரசு பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தின் மெரீனா வளாகம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
மேலும், பெரம்பலூா் வேப்பூா், புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூா், சிவகங்கை, அரக்கோணம், வேலூா் மாவட்டம்
குடியாத்தம், தென்காசி மாவட்டம் சுரண்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள் ஆகியன ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
கட்டடங்களுக்கு அடிக்கல்: சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், வேலூா், விழுப்புரம், திருப்பத்தூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.207.82 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டமைப்புகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, கோவி.செழியன், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பி.வில்சன், உயா் கல்வித் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி, கல்லூரி கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசன்ட் திவ்யா, ராணி மேரி கல்லூரி முதல்வா் பி.உமா மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.