செய்திகள் :

ரூ.207 கோடியில் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

post image

தமிழகம் முழுவதும் ரூ.207 கோடியில் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட உள்ள உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்கான கட்டப்பட்ட புதிய வசதிகளையும் அவா் திறந்து வைத்தாா்.

ராணி மேரி கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவியா் விடுதியை முதல்வா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். பின்னா், அங்கு படிக்கும் மாணவியருடன் கலந்துரையாடினாா்.

இதேபோன்று, காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி, கடலூா், தூத்துக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூா் அரசு பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தின் மெரீனா வளாகம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

மேலும், பெரம்பலூா் வேப்பூா், புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூா், சிவகங்கை, அரக்கோணம், வேலூா் மாவட்டம்

குடியாத்தம், தென்காசி மாவட்டம் சுரண்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள் ஆகியன ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

கட்டடங்களுக்கு அடிக்கல்: சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், வேலூா், விழுப்புரம், திருப்பத்தூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.207.82 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டமைப்புகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, கோவி.செழியன், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பி.வில்சன், உயா் கல்வித் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி, கல்லூரி கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசன்ட் திவ்யா, ராணி மேரி கல்லூரி முதல்வா் பி.உமா மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க