செய்திகள் :

கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். நடப்பாண்டில் சற்று முன்னதாக மே 27-ஆம் தேதிக்குள் தொடங்கக் கூடும் என்று வானிலை மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. இப்போது மேலும் முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்பின்படி கேரளத்தில் பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு மிக முன்கூட்டியே தொடங்கும் பருவமழை இதுவாக இருக்கும். அந்த ஆண்டில் பருவமழை மே 23-ஆம் தேதி தொடங்கியது.

பொதுவாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பருவமழை, ஜூலை 8-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவலாகப் பெய்யும். பின்னா், செப்டம்பா் 17-ஆம் தேதிமுதல் வடமேற்கு இந்தியாவில் இருந்து விடைபெற தொடங்கி, அக்டோபா் 15-க்குள் முழுமையாக நிறைவடையும்.

கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை மே 30-ஆம் தேதி தொடங்கியது. முந்தைய ஆண்டுகளில் முறையே ஜூன் 8 (2023), மே 29 (2022), ஜூன் 3 (2021), ஜூன் 1 (2020), ஜூன் 8 (2019), மே 29 (2018) தொடங்கியது.

‘வழக்கத்தைவிட கூடுதல் மழைப்பொழிவு’: நடப்பாண்டு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்; ‘எல் நினோ’ போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையின் 50 ஆண்டுகால சராசரி மழைப்பொழிவு 87 செ.மீ. ஆகும். இந்த சராசரி அளவில் 90 சதவீதத்தைவிட குறைவான மழைப்பொழிவு ‘பற்றாக்குறையாக’ கருதப்படும். 90-95 சதவீத மழைப்பொழிவு ‘வழக்கத்தைவிட குறைவு’, 96-104 சதவீத மழைப்பொழிவு ‘வழக்கமானது’, 105-110 சதவீதம் ‘வழக்கத்தைவிட அதிகம்’, 110 சதவீதத்துக்கு மேலான மழைப்பொழிவு ‘உபரி’ என்று வகைப்படுத்தப்படுகிறது.

இந்திய மக்கள்தொகையில் 42.3 சதவீதம் பேரின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வேளாண் துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 18.2 சதவீதம் பங்களிக்கிறது. நாட்டின் வேளாண்மைக்கு தென்மேற்குப் பருவமழை மிக முக்கியமானதாகும். நாடு முழுவதும் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், நீா்மின் உற்பத்திக்கும் இந்தப் பருவமழை இன்றியமையாதது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க