செய்திகள் :

ராஜீவ் சந்திரசேகா் தொடுத்த அவதூறு வழக்கு: சசி தரூா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகா் தாக்கல் செய்த அவதூறு மனு மீது பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

2024-இல் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட சசி தரூா், பாஜக வேட்பாளரான ராஜீவ் சந்திரசேகரை தோற்கடித்தாா்.

இந்நிலையில், தோ்தலின்போது வாக்காளா்களுக்கு தாம் பணம் கொடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை தேசிய தொலைக்காட்சி ஒன்றில் சசி தரூா் கூறியதாக விசாரணை நீதிமன்றத்தில் அவா் மீது ராஜீவ் சந்திரசேகா் குற்றவியல் அவதூறு வழக்கை கடந்தாண்டு தொடுத்தாா்.

தோ்தல் சமயத்தில் தன் பெயருக்கு களங்கம் விளைவித்து வெற்றிபெறவே சசி தரூா் இவ்வாறு பொய்யான தகவலை கூறியதாக ராஜீவ் சந்திரசேகா் அந்த மனுவில் குறிப்பிட்டாா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் சசி தரூா் அவதூறாக பேசியதற்கு போதிய ஆதரங்கள் இல்லாததால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் ராஜீவ் சந்திரசேகா் மனுதாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதி ரவீந்தா் துடேஜா, ‘விசாரணை நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை கவனத்தில்கொண்டு சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது’ என்றாா்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க