செய்திகள் :

'அது வருத்தம் தான்' - காங்கிரஸ் கட்சி குறித்து கார்த்தி சிதம்பரம்

post image

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோவையில் கட்சிப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. கள அரசியலில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.

கார்த்தி சிதம்பரம்

தமிழக துணைவேந்தர்கள், தமிழக கவர்னர் முகாமில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்துள்ளது. இதை மறுக்க முடியாது. ஆனால் அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைத்திருப்பதை அதிமுக-வின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.

தவெக தேர்தலில் எந்தளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அரசியல் கட்சி என்றால் அனைத்து பிரச்னைகளிலும் கருத்து கூற வேண்டும். அவர்கள் தனித்து நிற்பார்களா அல்லது என்ன முடிவு என்று தெரியவில்லை. கட்சிக்கு கட்டமைப்பு மிகவும் முக்கியம். காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டுவதில் தவறில்லை.

காங்கிரஸ்

அனைத்து கட்சிகளுமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம் தான்.

ஆனாலும் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. தமிழக கவர்னர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

முதலமைச்சர்

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்திய ஜனாதிபதி எழுதியிருக்கும் கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. இதில் தமிழக முதலமைச்சர், பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.” என்றார்.

வெடித்த வன்கொடுமை விவகாரம்; தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி ... மேலும் பார்க்க

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' - விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க

புதுச்சேரி: கொரோனா தொற்று… மக்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது சுகாதாரத்துறை!

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளித்து தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சுகாதாரத்துறை... மேலும் பார்க்க

TVK : ``திமுகவை அப்படி சொல்லாதீங்க திருமா அண்ணா" - ஆதவ் அர்ஜூனா காட்டம்

'ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர் சந்திப்பு!'விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார... மேலும் பார்க்க

Shashi Tharoor: 30 ஆண்டுகால ஐ.நா அனுபவம் டு காங்கிரஸ் சீனியர் தலைவர் - சசி தரூரை குறிவைக்கிறதா BJP?

பாஜக-வின் `ஆபரேஷன் சௌத்'தில் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் காங்கிரஸின் சசி தரூர்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்... மேலும் பார்க்க

நீட் பயத்தால் மாணவன் தற்கொலை; 'ஒரே ஒரு முறை பெற்றோர்களை சிந்தித்துப் பாருங்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டியில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும், திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி... மேலும் பார்க்க