செய்திகள் :

கோவை: பெண் யானைக்கு ஹார்ட் அட்டாக்? - சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்த சோகம்!

post image

கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் யானை கண்டறியப்பட்டது. அருகிலேயே அதன் குட்டி யானை பரிதவிப்புடன், தாய் யானையை எழுப்ப முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

யானைகள்

குட்டி யானை வனப்பகுதிக்கு சென்ற நிலையில், தாய் யானைக்கு கடந்த மே 17-ம் தேதி முதல் வனத்துறை மருத்துவக் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

கும்கி யானை மற்றும் கிரேன் உதவியுடன் வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதில், யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் வனத்துறை கூறியிருந்தது. 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானைக்கு 100க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன.  நான்காவது நாளான இன்று அந்த யானைக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக ஹைட்ரோ தெரஃபி மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.

ஹைட்ரோ தெரஃபி சிகிச்சைக்காக, வனப்பகுதியில் தற்காலிக குட்டை அமைத்து அதில் 18,000 லிட்டர் தண்ணீர் நிரப்பினர். பிறகு பொக்லைன் மூலம் யானை குட்டையில் இறக்கி சிகிச்சையளிக்கப்பட்டது. குழாய்கள் மூலம் யானையின் உடலில் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், அந்த பெண் யானை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது. "யானைக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்றோம். நாளை பிரேத பரிசோதனை செய்த பிறகே யானையின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும்." என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

'ஊருக்கெல்லாம் சோறு போட்ட கிழவி அவை' - கசந்துக் கொண்டிருக்கிற தேனீக்களின் வாழ்க்கை! WorldHoneyBeeDay

ஆதி மனிதனில் ஒருவன், குகைக்குள் இருந்த தேன் கூட்டில் இருந்தோ அல்லது பாறை இடுக்கில் இருந்த தேன் கூட்டில் இருந்தோ வழிந்த அந்த பொன் நிற திரவத்தை, ஒற்றை விரலால் தொட்டு உள்ளுணர்வின் தூண்டுதலால் தன் நாவில் ... மேலும் பார்க்க

காலநிலை மாற்றம் : மே‌‌ இல்லை, இனி ஜூன் தான் கோடைக்காலமா? - காரணம் என்ன?

கோடைக்காலம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மே மாதமும், கொளுத்தும் வெயிலும், கோடை விடுமுறையும்தான். இப்படி காலம்காலமாக கோடைக்காலம் மே மாதத்துடனே பின்னிப்பிணைந்து இருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமு... மேலும் பார்க்க

மூளைக்கு அமைதியளிக்கும் பறவைகளின் விடியற்காலை கோரஸ்; என்ன காரணம்?

அதிகாலை நேரத்திலோ, அல்லது பூங்காவில் நடக்கும்போதோ, அல்லது இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு செல்லும்போதோ, நம் காதுகளை வருடும் பறவைகளின் ஒலி நம்மை அறியாமல் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த உணர்வை நாம் எல... மேலும் பார்க்க

Smart Water ATM : சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் `தண்ணீர் ஏடிஎம்’

Smart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATM மேலும் பார்க்க

கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை

கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, தாய் யானை உடல்நலக் குறைவ... மேலும் பார்க்க

மண்ணுக்குள் 16 வருடம்; வேர்கள் ஊட்டும் தாய்ப்பால்; காட்டின் சிம்பொனி - சில்வண்டுகளின் வாழ்க்கை!

இயற்கை சூழ்ந்த பகுதியில் ஒரு ரிசார்ட். மாலையில் சிறிது நேரம் மழை பெய்து மண்ணை குளிர வைத்திருந்தது. அந்த ரிசார்ட்டில் கோடை விடுமுறையைக் கொண்டாட தங்கியிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பொடிசுகள், நீச்சல்... மேலும் பார்க்க