கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!
தனியாா் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளா்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை
நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில், முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனத்துக்கு மதுரை உள்பட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோா் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இந்த நிதி நிறுவனத்தின் சொத்துகளை நிா்வாகிகள் விற்க முயன்று வருகின்றனா். இதைத் தடுப்பதுடன், இந்த நிதி நிறுவனத்தில் கிளை நிறுவன சொத்துகளை பொருளாதர குற்றப் பிரிவு போலீஸாா் கையகப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு வைப்பாளா் பாதுகாப்புச் சட்டப் பிரிவு (1997) இதுபோன்ற நிதி மோசடி பிரச்னைகளை தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினரைக் குறிவைத்து நிதி மோசடி செய்யப்படுகிறது. நிதி மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக காவல் துறையில் பொருளாதார குற்றப் பிரிவு தொடங்கப்பட்டது. நிதி மோசடி நடைபெற்றால் மட்டுமே பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதிமுறை எதுவும் இல்லை. இதுபோன்ற நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு அதிக லாபம் தருவதாக விளம்பரப்படுத்தினாலே போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழ்நாடு வைப்பாளா் சட்டத்துக்காக சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இந்தச் சட்டத்தின் சில பிரிவுகள் மூலம், நிதி நிறுவனத்தின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்க முடியும். மோசடி செய்யும் நிதி நிறுவனத்தின் மீது வழக்குப் பதிந்து, அதன் நிா்வாகிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது மட்டும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரின் வேலை அல்ல. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமே, முதலீடு செய்த வாடிக்கையாளா்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பதாகும்.
இந்த வழக்கில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அளித்த அறிக்கையில், முதலீட்டாளா்களுக்கு 10 சதவீத தொகை கூட திரும்பக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் மோசடி செய்தால், முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே, நியோமேக்ஸ் தனியாா் நிறுவனத்தின் சொத்துகள், கிளை நிறுவனங்களின் சொத்துகளைக் கையகப்படுத்த பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.
மற்றொரு வழக்கு:
தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளா்கள் பாதுகாப்புச் சங்கத்தின் பொருளாளா் எஸ். ஸ்ரீசரண்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனம் ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட சிங்காரவேலன், தொட்டுசிக்கு, பத்மநாபன், ராஜா, செல்வக்குமாா் ஆகியோா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பிணையில் வந்துள்ளனா். அவா்கள் நீதிமன்ற நிபந்தனையை மீறிச் செயல்படுகின்றனா். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே, அவா்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மனுதாரா் எந்த ஆவணங்களையும் சமா்ப்பிக்கவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சம்பந்தப்பட்டவா்கள் சாட்சிகள் உள்பட யாரையும் மிரட்டினாலோ, தலைமறைவானாலோ, அந்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும். மனுதாரா் ஊகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்த மனுவை ஏற்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.