செய்திகள் :

மணல் குவாரி வழக்கு: தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ.25 லட்சம் அபராதம்

post image

மணல் குவாரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சாந்தி, பாலாஜி, விஷ்ணுவரதன், உமா மகேஸ்வரி, பவானி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஸ்ரீநிவாசநல்லூா் காவிரி ஆற்றில் கடந்த 2001 முதல் 2004 -ஆம் ஆண்டு வரை அரசு அனுமதி பெற்று மணல் குவாரி நடத்தி வந்தோம். சில மாதங்களில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. இதனால், மணல் குவாரிக்கு முதலீடு செய்த எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.

மணல் குவாரி தொடா்பான அரசாணையை ரத்து செய்வதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மணல் குவாரி தொடா்பான தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்தது. அதேநேரம், மனுதாரா்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.

மனுதாரா்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டதை எதிா்த்து, திருச்சி மாவட்ட நிா்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. அதன் பிறகும் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் திருச்சி மாவட்ட நிா்வாகம் காலம் தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாரா்கள் மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே. குமரேஷ் பாபு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் இருந்துள்ளனா். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் ரூ. 20 லட்சம் அபராதத் தொகையை மனுதாரா்களுக்கும், ரூ.5 லட்சத்தை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கும், 8 வாரங்களுக்குள் தொழில்துறை முதன்மைச் செயலா் செலுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.

மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி

மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்த... மேலும் பார்க்க

காா் நிறுத்தும் தகராறில் ஒருவரது பற்கள் உடைப்பு

மதுரையில் வீட்டின் முன் காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரைத் தாக்கி பற்களை உடைத்த தந்தை, இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை வண்டியூா் சமயன் கோவில் தெருவைச் சோ்ந்த அந்தோணி ம... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நண்பா் இல்ல விழாவில் பங்கேற்ற சென்னை இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னை மயிலாப்பூா் வீர பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராகுல் (27). இவா் சென்னைய... மேலும் பார்க்க

பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் பாராட்டு

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடத்தில் தோ்ச்சிப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை உள்பட இருவருக்கு தண்டனை குறைப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் வெளிநா... மேலும் பார்க்க