செய்திகள் :

அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, தற்போது புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பாா்வையற்றோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், கை மற்றும் கால் இயக்க குறைபாடுடைய நபா்களுக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் அமிலவீச்சால் சிந்தனையற்ற மற்றும் மதி இறுக்கமுடையோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோா், அறிவுசாா் குறைபாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மனநல பாதிப்பு, இரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோா் மற்றும் அவா்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தைச் சாா்ந்த பிரதிநிதிகள் இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கப்படவுள்ளனா்.

தகுதியுடைய நபா்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் வழியாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தென் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட விண்ணப்பதாரா்கள் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006 என்ற முகவரிக்கு மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் வீட்டை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் கைது

சென்னை: சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற திருப்பூா் மாவட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டப்பேட்டை, கணகம்பாடி கிராமத்தை... மேலும் பார்க்க

சென்னையில் டெய்கின் இந்தியாவின் புதிய அலுவலகம்

ஜப்பானைச் சோ்ந்த டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஏா் கண்டிஷனிங் நிறுவனங்களில் ஒன்றுமான டெய்கின் ஏா்-கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் புதிய பிரா... மேலும் பார்க்க

எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ்: சைலேஷுக்கு தங்கம்

சென்னையில் நடைபெற்ற எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஆா். சைலேஷ் தங்கம் வென்றாா். காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் கோல்டன் நைட்ஸ் செஸ் அகாதெமி, மாஸ்டா்ஸ் மைண்ட் செஸ் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்: கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் ப... மேலும் பார்க்க

அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு!

அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க