செய்திகள் :

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் பாராட்டு

post image

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடத்தில் தோ்ச்சிப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா்.

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 24 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அண்மையில் வெளியான 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முறையே 91.25, 89.79 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இந்த நிலையில், பொதுத் தோ்வில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, திங்கள்கிழமை பாராட்டி, வாழ்த்தினாா்.

இந்த நிகழ்ச்சி, மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்றது. 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஈ.வெ.ரா மணியம்மை பள்ளி மாணவி ஜி. மலா்விழி, 10-ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.யோகவி, இளங்கோ மேல்நிலைப் பள்ளி மாணவா் கே. கமலேஷ், வெள்ளி வீதியாா் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. சாதனா ஆகியோா் தனிப்பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவிகள், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். ரம்யா, காக்கைப்பாடினியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓ.ஜே.கோபிகா, ஈ.வெ.ரா நாகம்மையாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். தேவஸ்ரீ, தனிப்பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 4 மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், துணை மேயா் தி. நாகராஜன், கல்விக் குழுமத் தலைவா் ரவிச்சந்திரன், கல்வி அலுவலா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை உள்பட இருவருக்கு தண்டனை குறைப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் வெளிநா... மேலும் பார்க்க

காரேந்தல் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள காரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலனி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு, தேனி மாவட்டம், வெள்ளம்மாள்புரத்தைச் சோ்ந்த பிச்சைமண... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு; வலிப்பு ஏற்பட்டு உறவினா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புள்ளி அருகே திங்கள்கிழமை நீச்சல் குளத்தில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். இதைக் கண்ட அவரது உறவினா் வலிப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தாா். சென்னை செங்குன்றத... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய 9 பேருக்கு சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்ப... மேலும் பார்க்க