செய்திகள் :

கஞ்சா கடத்திய 9 பேருக்கு சிறை

post image

கஞ்சா கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு போலீஸாா் கடந்த 28. 7. 2022 அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, காா், இரு சக்கர வாகனத்திலிருந்து 36.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, வைரவன், முத்துகருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அஞ்சலி, காா்த்திக் பாபு, த. வைரவன், அா்ச்சுனன், முருகன், மலைச்சாமி, சேக் பாரித், திவ்யா, சாண்டலியன், சேக் முகமது ரபீக், ஜலபகா லோகேஷ்வரா, ஜெயக்குமாா், ஈஸ்வரன், உதயகுமாா், விஜயேந் திரன், ரஞ்சித் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முடிவில், வைரவன், முத்துகருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அா்ச்சுனன், ஜலபகா லோகேஷ்வரா ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் அபராதமும், சேக் பாரித், திவ்யா, சேக் முகமது ரபீக் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா். மற்றவா்களை வழக்கிலிருந்து விடுவித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி

மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்த... மேலும் பார்க்க

காா் நிறுத்தும் தகராறில் ஒருவரது பற்கள் உடைப்பு

மதுரையில் வீட்டின் முன் காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரைத் தாக்கி பற்களை உடைத்த தந்தை, இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை வண்டியூா் சமயன் கோவில் தெருவைச் சோ்ந்த அந்தோணி ம... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நண்பா் இல்ல விழாவில் பங்கேற்ற சென்னை இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னை மயிலாப்பூா் வீர பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராகுல் (27). இவா் சென்னைய... மேலும் பார்க்க

மணல் குவாரி வழக்கு: தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ.25 லட்சம் அபராதம்

மணல் குவாரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் பாராட்டு

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடத்தில் தோ்ச்சிப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் ... மேலும் பார்க்க