செய்திகள் :

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

post image

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தில் 10 முறை அமெரிக்காவுக்குச் சென்றுவந்ததும் அடங்கும் என சுட்டிக்காட்டிய அவர், உலக அரங்கில் இந்தப் பயணங்கள் ஏதேனும் பலனை அளித்ததா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் அடிக்கடி அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் மல்லிகார்ஜுன கார்கே தனத் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்கே பதிவிட்டுள்ளதாவது,

''பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளாக அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார். ஆனால், நமது இந்தியா தற்போது தனித்துவிடப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி 72 நாடுகளுக்கு 151 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதில், 10 முறை அமெரிக்காவுக்குச் சென்றுவந்துள்ளார். ஆனாலும், மோடியின் வெளியுறவுக் கொள்கையால் நம் நாடு தனித்து நிற்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்துக்கொள்வது மட்டும்தான் பிரதமரின் பணியா?

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.4 பில்லியன் டாலர் கொடுத்து உதவ முன்வந்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக நமது துணிச்சலான ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தி முன்னேறிவந்தபோது, திடீரென போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த 7 முறை மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். அவரின் இப்பேச்சு இந்தியாவை அவமதிக்கும் வகையில் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நின்றது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல், இந்த விவகாரத்தை மூடி மறைக்கப்பார்க்கிறார்.

மோடி அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பஹல்காமில் குடிமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் துறையோ அல்லது படைகளையோ அங்கு நிறுத்தவில்லை. மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை. மே 17ஆம் தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்லவேண்டியிருந்தது. ஆனால், அவர் செல்லவில்லை. ஏனெனில் உளவுத் துறை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்திருப்பார்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க |கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள் எவை?

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பா... மேலும் பார்க்க