செய்திகள் :

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

post image

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 4 முதல் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதற்கு ஏற்ற வானிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மே 20) அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.

கேரளத்தின் வட மாவட்டங்களான, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலக்காடு, மலப்புரம், திரிச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புலா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கேரளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரம் கூறுகையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், 204.4 மி.மீ. அளவிலான அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், 115.6 மி.மீ. அளவிலான மிக கன மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன், அதி தீவிர கனமழை மேலும் பல முக்கிய பாதிப்புகளை உண்டாக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிகளவிலான மழை பெய்யவுள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகவும்; மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் எனவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அரசுத் துறைகள் விரைந்து எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டதுடன், எச்சரிக்கை மிகுந்த பகுதிகளில் வாழும் மக்கள் விரைவாகப் பாதுகாப்பான முகாம்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! 5 பேர் பலி

ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி

இந்தூா், மே 20: மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி துப்பல வெங்கட ரமணா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். தனது கடைசி பணி நாளில் மிகுந்த வேதனையுடன் உச்சநீதிமன்றம் மீது அவா் அதிருப்தி தெரிவித்தாா். மத்திய பி... மேலும் பார்க்க

வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தியுள்ளாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற... மேலும் பார்க்க

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க