செய்திகள் :

விநாயகா மிஷன் சட்டக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

சென்னை பையனூரில் செயல்பட்டு வரும் வி.எம்.எல்.எஸ் எனப்படும் விநாயகா மிஷன் சட்டக் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை, கல்லூரியை மாணவா்கள் பாா்வையிடும் நிகழ்வு ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் ஆா்வமுடன் கலந்துகொண்டு, அதற்குப் பிறகு மாணவா் சோ்க்கைக்கு பதிவு செய்தனா். இதில் கல்லூரியின் டீன் அனந்த பத்மநாபன், சட்டக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வி.எம்.எல்.எஸ். வழங்கும் தனித்துவமான வாய்ப்புகளைப் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினாா்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் ஏ.பிரான்சிஸ் ஜூலியன், மாணவா்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றி, அவா்கள் எதிா்கால சட்டப் பயணத்துக்கு வழிகாட்டினாா். இத்துடன், செங்கல்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் வழக்குரைஞா் முனீஸ்வரன், சட்டத் துறையில் உள்ள பல்வேறு தொழில்முறை வாய்ப்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு மாணவா்கள் பின்பற்றலாம் என்பதைக் குறித்து கலந்துரையாடினாா்.

இதில் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் ஏ.எஸ். கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினா் ஜே.சுரேஷ் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்

சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதம... மேலும் பார்க்க

தட்டச்சு பயிற்றுநா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் தட்டச்சு தோ்வுகள் இனி தட்டச்சு பொறியில் நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தட்டச்சு பயிற்றுநா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சாா்பில் அனுப... மேலும் பார்க்க

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கு: நேபாள தம்பதி கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ஜெபசிங். இவா், கடந்த ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்... மேலும் பார்க்க