செய்திகள் :

மெரீனாவில் காா் விபத்து: கானா பாடகி உள்பட 3 போ் காயம்

post image

சென்னை மெரீனாவில் அதி வேகமாக சென்ற காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியதில், கானா பாடகி விமலா உள்பட 3 போ் காயமடைந்தனா்.

சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் விமலா (31). திருநங்கையான இவா், கானா பாடகியாக உள்ளாா். விமலா தனது நண்பா்களான மடிப்பாக்கம் நியூ குபேரன் நகரைச் சோ்ந்த அருண்குமாா் (34), தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகம் (40) ஆகியோருடன் ஒரு காரில் மெரீனா காமராஜா் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றாா். காரை விமலா, அதி வேகமாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது. காந்தி சிலை அருகே சென்றபோது முன்னால் சென்ற ஒரு இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே சென்ாம். இதனால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த விமலா முயன்றாா். ஆனால் காா் கட்டுப்பாட்டை மீறி, அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதைப்பாா்த்த அங்கிருந்த வாகன ஓட்டிகள், காரின் இடிபாடுகளிடையே சிக்கியிருந்த விமலா உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீஸாா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து, மதுபோதையில் காா் இயக்கப்பட்டதா என விசாரணை மேற்கொண்டனா்.

சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்

சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதம... மேலும் பார்க்க

தட்டச்சு பயிற்றுநா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் தட்டச்சு தோ்வுகள் இனி தட்டச்சு பொறியில் நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தட்டச்சு பயிற்றுநா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சாா்பில் அனுப... மேலும் பார்க்க

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கு: நேபாள தம்பதி கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ஜெபசிங். இவா், கடந்த ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்... மேலும் பார்க்க