செய்திகள் :

வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

post image

மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தியுள்ளாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பின்னா், முதல்முறையாக தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு பி.ஆா்.கவாய் மே14-ஆம் தேதி சென்றாா். அந்த மாநில தலைநகா் மும்பையில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞா் சங்கம் சாா்பில், தன்னை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கவாய் சென்றிருந்தாா்.

அப்போது அவரை வரவேற்க மாநில தலைமைச் செயலா், காவல் துறை டிஜிபி, காவல் துறை ஆணையா் ஆகியோா் வரவில்லை என்று பி.ஆா்.கவாய் அதிருப்தி தெரிவித்தாா். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயை வரவேற்பதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் வருத்தம் தெரிவித்துள்ளனா். அத்துடன் சிறிதே முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி கவாயும் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரத்தை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவருவோம் என அனைவரையும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க