செய்திகள் :

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடர்: 5 போட்டிகள் அல்ல; 3 போட்டிகளாக குறைப்பு!

post image

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மே 25 முதல் ஜூன் 3 வரையிலான இடைவெளியில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதாக இருந்தது. தற்போது, இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் 3 போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் ஒன்றாக இணைந்து டி20 தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளன. தொடரின் மூன்று போட்டிகளையும் லாகூரிலுள்ள கடாஃபி திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த தொடரின் இறுதிப்போட்டி வருகிற மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், பாகிஸ்தான் - வங்கதேசத்துக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கதேசம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் த்ரில்லர்: ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. சார்ஜாவில் நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 205/5 ரன்கள் எடுத்தத... மேலும் பார்க்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி அவர்களது ஓய்வு முடிவினை திரும்பப் பெற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டினைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

10 கிலோ உடல் எடையைக் குறைத்த சர்பராஸ் கான்!

இந்திய வீரர் சர்பராஸ் கான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக 10 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.இங்கிலாந்து எதிராக 2024ஆம் ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கிய இந்திய வீரர் சர்பராஸ் கான் இந்தியாவுக்கு... மேலும் பார்க்க

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்ட பென் ஸ்டோக்ஸ்!

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்த... மேலும் பார்க்க

தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்

தோனியின் ரசிகர்கள் ’இயல்பாகச் சேர்ந்த கூட்டம்!’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நடைபெற்றதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரசியமாக பே... மேலும் பார்க்க

வீரர்கள் அவர்களை நன்றாக புரிந்துகொண்டால்.... என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்?

கிரிக்கெட் வீரர்கள் அவர்களை நன்றாக அறிந்துகொள்ளும்போது அவர்களது திறன் மேலும் அதிகரிப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் தலைமைப் ... மேலும் பார்க்க