செய்திகள் :

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்ட பென் ஸ்டோக்ஸ்!

post image

காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, காயம் ஏற்பட்டது. அதன் பின், பென் ஸ்டோக்ஸ் பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணியுடன் மீண்டும் இணையவுள்ளார்.

மது அருந்துவதை கைவிட்ட பென் ஸ்டோக்ஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ள நிலையில், காயத்திலிருந்து மீண்டு வருவதற்காக மது அருந்துவதை கைவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: எனக்கு முதல் முறையாக பெரிய காயம் ஏற்பட்டது குறித்து நினைவிருக்கிறது. அந்த காயம் ஏற்படுவதற்கு 5 நாள்களுக்கு முன்பாக நாங்கள் சிறிது மது அருந்தியிருந்தோம். அதன் காரணமாக, அந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தேன். அதன் பின், நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்.

என்னுடைய பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினேன். கடந்த ஜனவரி 2 ஆம் தேதியிலிருந்து நான் மது அருந்தவில்லை. எனது காயம் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் வரை மது அருந்த மாட்டேன் என கூறிக்கொண்டேன் என்றார்.

தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்

தோனியின் ரசிகர்கள் ’இயல்பாகச் சேர்ந்த கூட்டம்!’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நடைபெற்றதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரசியமாக பே... மேலும் பார்க்க

வீரர்கள் அவர்களை நன்றாக புரிந்துகொண்டால்.... என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்?

கிரிக்கெட் வீரர்கள் அவர்களை நன்றாக அறிந்துகொள்ளும்போது அவர்களது திறன் மேலும் அதிகரிப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் தலைமைப் ... மேலும் பார்க்க

அடுத்த கேப்டனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பு; பும்ராவுக்கு ஆதரவாக வேகப் பந்துவீச்சாளர்!

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் அணியின் கேப்டனாக ராஸ்டன் சேஸ் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ராஸ்டன் சேஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த கிரைக் பிரத்வெயிட் க... மேலும் பார்க்க

இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா ம... மேலும் பார்க்க

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று (மே 16) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க