செய்திகள் :

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் மரணம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே குளத்தி மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மகன் தரணிதரன்(13) பு.முட்லூா் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறை என்பதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு தரணிதரன் சென்றாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றாா். மீண்டும் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடினா். மேலும், அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளா் கே,அம்பேத்கா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கவரப்பட்டு கிராம குளத்தில் தரணிதரன் உடல் மிதந்தது தெரிய வந்தது. விளையாடும் போது தவறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள ஆண்டாா் முள்ளிபள்ளம், அம்பேத்கா் தெருவைச... மேலும் பார்க்க

நெய்வேலியில் திமுக தொகுதிச் செயல்வீரா்கள் கூட்டம்!அமைச்சா்கள் கே.என்.நேரு, சி.வெ.கணேசன் பங்கேற்பு!

கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், 2026 ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நெய்வேலி வட்டம் 25 பகுதியில் உள்ள தொமுச அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூா் மேற்கு மாவட... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 178 காவலா்களுக்கு பணியிட மாறுதல்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 178 காவலா்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தாா். கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்திய... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு: தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம்

கடலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தோ்வுகளில் பங்கேற்க தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக... மேலும் பார்க்க

புவனகிரியில் 62 மி.மீ மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 62 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. இந்த நி... மேலும் பார்க்க