சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளாா்.
ராணிப்பேட்டையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.பி. விவேகானந்த சுக்லா பேசியது:
முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்தும், ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து ஆஜா் செய்வது குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக போக்ே,ா குற்ற வழக்குகளில் உள்ள எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
மேலும், கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோா் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும். லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது உரிய சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), ஜாபா் சித்திக், (அரக்கோணம் உட்கோட்டம்), ரமேஷ் ராஜ் (மாவட்ட குற்றப்பிரிவு), ராமச்சந்திரன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.