செய்திகள் :

விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யாவிட்டால் ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

post image

அரக்கோணம்: நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவோம் என மாவட்டச் செயலா் சு.ரவி எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியில் 76 நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமலும் கொள்முதல் செய்த நெல்லை வாணிபகிடங்குகளுக்கு எடுத்துச்செல்லாமல் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருப்பதால் மழையில் நனைந்து விவசாயிகளுக்கும் அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 26 கொள்முதல் நிலையங்களில் சுமாா் ஒரு மாதத்திற்கு முன்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனா்.

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் அடுத்த போகம் நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

இனியாவது அரசு காலம் தாழ்த்தாமல் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றாா்.

இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

அரக்கோணம்: அண்மையில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை... மேலும் பார்க்க

அரக்கோணம், சோளிங்கா், நெமிலியில் மே 22-இல் ஜமாபந்தி தொடக்கம்

அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளாா். மேலும், ... மேலும் பார்க்க

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளாா். ராணிப்பேட்டையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் கடத்தல்: 2 போ் கைது

அரக்கோணம்: மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகளை கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் சந்திர குமாா், உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன் மற்றும் போல... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். திமிரி பாத்திகாரன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சின்னதுரை (50). இவா் பரதராமி கிராமத்திலிருந்து திமிரிக்கு பைக்கில் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்

ஆற்காடு தோப்பு கானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவத்... மேலும் பார்க்க