`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
தாராபுரத்தில் இன்றுமுதல் 7 நாள்களுக்கு ஜமாபந்தி
தாராபுரத்தில் வருவாய்த் தீா்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை (மே 20) தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறவுள்ள ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாராபுரம் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு பெறலாம் என்று தாராபுரம் வட்டாட்சியா் திரவியம் தெரிவித்துள்ளாா்.
வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் நாள்களும், இடங்களும்: தாராபுரம் உள்வட்டத்துக்குள்பட்ட சித்ராவுத்தன்பாளையம், நஞ்சியம்பாளையம், ஆலாம்பாளையம், கொளத்துப்பாளையம், நல்லாம்பாளையம், வீராட்சிமங்கலம், கொளிஞ்சிவாடி, தாராபுரம் வடக்கு, தாராபுரம் தெற்கு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெற உள்ளது.
அலங்கியம் உள் வட்டத்துக்குள்பட்ட காங்கயம்பாளையம், சின்னக்காம்பாளையம், செலாம்பாளையம், ஊத்துப்பாளையம், தளவாய்பட்டினம், மணக்கடவு, அலங்கியம், கொங்கூா், பொம்மநல்லூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) நடைபெற உள்ளது.
மூலனூா் உள்வட்டத்துக்குள்பட்ட பெரமியம், தூரம்பாடி, சின்னமருதூா், கொமாரபாளையம், கிளாங்குண்டல், மூலனூா், காளிபாளையம், வெள்ளவாவிபுதூா், பொன்னிவாடி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற உள்ளது.
கன்னிவாடி உள் வட்டத்துக்குள்பட்ட கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத்தலையூா், சேனாபதிபாளையம், சுண்டக்காம்பாளையம், வேளாம்பூண்டி, அரிக்காரன்வலசு, எடக்கல்பாடி, முளையாம்பூண்டி, புதுப்பை, எரசினம்பாளையம், தட்டாரவலசு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெற உள்ளது.
’குண்டடம் உள் வட்டத்துக்குள்பட்ட கொக்கம்பாளையம், நந்தவனம்பாளையம், காசிலிங்கம்பாளையம், குண்டடம், ஜோதியம்பட்டி, எரகாம்பட்டி, மானூா்பாளையம், முத்தியம்பட்டி, பெரிய குமாரபாளையம், நவநாரி, பெல்லம்பட்டி, வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், மோளரப்பட்டி, மருதூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெற உள்ளது.
பொன்னாபுரம் உள் வட்டத்துக்குள்பட்ட முண்டுவேலம்பட்டி, நாரணாபுரம், பொன்னாபுரம், கோவிந்தாபுரம், சின்னபுத்தூா், தொப்பம்பட்டி, மடத்துப்பாளையம், வரப்பாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) நடைபெற உள்ளது.
சங்கரண்டாம்பாளையம் உள் வட்டத்துக்குள்பட்ட சூரியநல்லூா், கண்ணாங்கோவில், கொழுமங்குளி, சிறுகிணறு, வடுகபாளையம், சங்கரண்டாம்பாளையம், புங்கந்துறை, மாம்பாடி, நாதம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற உள்ளது. எனவே, தங்களது பகுதிகளில் நடைபெறும் ஜமாபந்தியில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.