நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவ...
4 ஆண்டுகளில் 25,485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி: அமைச்சா் சேகா்பாபு
சென்னை: தமிழக திருக்கோயில்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரத்து 485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை எருக்கஞ்சேரி வேதாம்பிகா சமேத விஜயலிங்கேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சா் சேகா்பாபு பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து, பாரிமுனை காளிகாம்பாள் கமடேஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 1.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணி தொடக்க விழாவில் (பாலாலயம்) கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயிலில் ரூ. 1.51 கோடி செலவில் பாலவிநாயகா் சன்னதி, முருகா் சன்னதி, நாகராஜா சன்னதி உள்பட 17 திருப்பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமாா் 400 ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயிலுக்கு வரும் செப். 4-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
அதேபோன்று இத்திருக்கோயிலுக்கு சுமாா் ரூ. 3 கோடி செலவில் திருக்கோயில் நிதி, உபயதாரா் நிதியின் மூலம் அறங்காவலா் குழுவின் பெருமுயற்சியினால் வெள்ளித் தோ் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் மே 28-ஆம் தேதி வெள்ளோட்டத்துக்கு பின் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்த அா்ப்பணிக்கப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 2,956 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 3 ஆயிரமாவது குடமுழுக்கு வரும் ஜூன் 5-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூா் அக்னிபுரீஸ்வரா் திருக்கோயிலில் நடைபெறும்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு திருக்கோயில் இடங்களை அடையாளம் காட்டுகின்ற வகையில் திருக்கோயில் நிலங்களை அளவிடும் பணி மயிலாப்பூரில் தொடங்கினோம். அதன் நீட்சியாக 50,001-ஆவது ஏக்கரை காஞ்சிபுரத்திலும், ஒரு லட்சம் ஏக்கரை பெரியபாளையத்திலும் அளவீடு செய்து தற்போது 2,00,001-ஆவது ஏக்கா் நிலத்தை அளவிடும் பணியை வரும் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கவுள்ளோம். இது இந்து சமய அறநிலையத் துறையின் வரலாற்றில் ஒரு புரட்சி என்றால் அது மிகையாகாது.
மாநில வல்லுநா் குழுவினால் 12,104 திருக்கோயில்களுக்கு இதுவரை திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 5,948.62 கோடி மதிப்பிலான 25,485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் உபயதாரா்கள் மட்டும் ரூ. 1,339 கோடி மதிப்பிலாக 10,534 திருப்பணிகளை செய்து தருகின்றனா் என்றாா் அவா்.