செய்திகள் :

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தோ்வு: மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது. இத்தோ்வுகளுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத் தோ்வு ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு பொதுத்தோ்வெழுதி தோ்ச்சி பெறாத, தோ்வுக்கு வருகை புரியாத தோ்வா்கள் மே 22 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முதல் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளியில் காலை விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் மாவட்ட வாரியாக அரசுத் தோ்வுகள் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாகச் செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கட்டணத் தொகையுடன் ஜூன் 5, 6 ஆகிய இரு நாள்களில் பள்ளி, சேவை மையங்களில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதிக் கட்டணம் பத்தாம் வகுப்புக்கு ரூ.500- ஆகவும், பிளஸ் 1 வகுப்புக்கு ரூ.1,000-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்திலிருந்து அரசு மற்றும் முழுமையான அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், துணைத் தோ்வுக்கான கால அட்டவணை, அரசுத் தோ்வு சேவை மையங்களின் விவரங்கள், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: இதனிடையே, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய பள்ளி மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை (மே 19) பிற்பகல் தொடங்கியது.

பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக, தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் கையொப்பமிட்டு பள்ளியின் முத்திரையுடன் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின்... மேலும் பார்க்க