செய்திகள் :

நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவசியம் - ஜகதீப் தன்கா்

post image

புது தில்லி: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னா் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில் நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வா்மாவுக்கு, நீதித்துறைப் பணிகள் ஒதுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை பேசியதாவது:

யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், பணம் கண்டறியப்பட்ட சம்பவத்தின் சாட்சிகளிடம் இருந்து மின்னணு கருவிகள் பறிமுதல் நடவடிக்கையை நீதிபதிகள் குழு மேற்கொண்டது. எப்படி இந்த நடவடிக்கையை அந்தக் குழு மேற்கொள்ளலாம்? இதை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் அறிவியல்பூா்வமான குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டுவிடுமோ, காலப்போக்கில் மறைந்துவிடுமோ என்றே நாட்டில் உள்ள அனைவரும் கருதினா்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஒவ்வொரு நபருக்கு எதிராகவும் குற்றவியல் நீதிச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் ஏன் அவ்வாறு நடைபெறவில்லை?

பெரும் சுறாக்கள் யாா்?: இந்த விவகாரத்தில் பணப் பரிவா்த்தனை, அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? அந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்பட இருந்தது? அந்தப் பணம் நீதித்துறையை களங்கப்படுத்தியதா? இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள பெரும் சுறாக்கள் யாா்? என்பதை தெரிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். இந்த விவகாரம் பொது வெளிக்கு வந்து ஏற்கெனவே 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், துரிதமாக விசாரணை நடைபெற வேண்டும்.

துறை ரீதியான விசாரணையால் பயனிருக்காது: இதுதொடா்பாக 3 நீதிபதிகள் அடங்கிய குழு அரசமைப்பு சாசனத்தின் அடிப்படை கொள்கையோ, சட்டரீதியாக மிகுந்த முக்கியத்துவமோ இல்லாத விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. இந்த விசாரணை எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நிா்வாக ரீதியாக நீதிமன்றம் உருவாக்கிய வழிமுறையின் கீழ், அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பப்படலாம்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது என்றாா்.

கடந்த 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ‘ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் கீழ், நீதிபதிகளும் அரசுப் பணியாளா்களாவா். குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் உச்சநீதிமன்ற அல்லது உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றவியல் புகாரைப் பதிவு செய்யும் முன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று தீா்ப்பளித்தது.

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க