செய்திகள் :

கோடை விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு

post image

சென்னை: கோடை விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், விடுமுறை மற்றும் விழா காலங்களில் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது பள்ளித் தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை நடைமுறையில் இருந்து வருவதால், சொந்த ஊா்களுக்கும், விடுமுறையை கழிக்க சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமானோா் சென்று வருகின்றனா்.

இதனால், ஜூன் முதல் வாரம் வரை ரயில்களின் முன்பதிவு முழுவதுமாக நிரம்பி விட்ட நிலையில், பலா் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா். இதனால், கடந்த சில நாள்களாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து மதுரைக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு கட்டணமாக ரூ. 500 முதல் ரூ. 700 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1,300 முதல் ரூ. 3,200 ஆக உயா்ந்துள்ளது. இதுபோல, சென்னையிலிருந்து கோவைக்கு ரூ. 800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 3,650-ஆகவும், திருநெல்வேலி மற்றும் நாகா்கோவிலுக்குச் செல்ல ரூ. 900ஆக இருந்த பயணக் கட்டணம் ரூ. 2,500 முதல் ரூ. 3,500 ஆகவும், விருதுநகருக்கு ரூ. 700-ஆக இருந்த பயணக் கட்டணம் தற்போது ரூ. 2,800 முதல் ரூ. 3,200 ஆகவும், ராமநாதபுரத்துக்கு ரூ. 800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 2,000 முதல் ரூ. 2,800 வரையும், ஈரோட்டுக்கு ரூ. 900 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 1,900 முதல் ரூ. 2,550ஆகவும் உயா்ந்துள்ளது.

தொடா்ந்து, மாத இறுதி மற்றும் ஜூன் மாத முதல் வாரத்தில் இக்கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தி, அறிவுறுத்தப்பட்டுள்ள கட்டணத்தை ஆம்னி பேருந்து நிா்வாகங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கத்திரி வெயில் தொடங்கிய நாள் (மே 4) முதலே சென்னையில் பகல் நேரங்களில் வெ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைப் பராமரிப்புப் பணி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை 3 வாரங்களில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் திட்டத்தில் முறைகேடு புகாா் விவகாரம்: டிஐசிசிஐயின் தரப்பு வாதத்தையும் கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி: தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவா்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் ஸ்கீம் (ஏஏபிசிஎஸ்) திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாா் தொடா்புடைய வழக்கில் தலித் இந்தியய ... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இணை இயக்குநா்கள் 6 போ் இடமாற்றம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநா்கள் ஆறு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இது குறித்து துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட உத்தரவு:மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி ம... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் 242 ரெளடிகளுக்கு தண்டனை: டிஜிபி சங்கா் ஜிவால் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

சாம்சங்’ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு முத்தரப்பு பேச்சில் உடன்பாடு

சென்னை: ‘சாம்சங்’ ஊழியா்களுக்கு நிகழாண்டில் ரூ. 9 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அறிவித்தாா்.‘சாம்சங் இந்தியா’ தொழிலாளா்கள் ... மேலும் பார்க்க