செய்திகள் :

கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் 242 ரெளடிகளுக்கு தண்டனை: டிஜிபி சங்கா் ஜிவால் தகவல்

post image

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் குற்றங்களை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், இந்த ஆண்டும் கொலை வழக்குகள் குறைந்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 483 கொலை வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரெளடிகளை கட்டுப்படுத்தும் வகையில், அவா்கள் மீதான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் விரைவுப்படுத்தப்படுகிறது. மேலும், நீதிமன்றத்,தில் ரெளடிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, 150 ரெளடிகளுக்கு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் அதிகமாகும். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் பழிக்குப்பழியாக 22 போ் கொலை செய்யப்பட்டனா்.

பழிக்குப் பழி கொலைகள்: இந்த ஆண்டில் கடந்த 4 மாதங்களில் பழிக்குப் பழியாக 18 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதற்கு போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம். போலீஸாரின் கடும் நடவடிக்கையால் 326 கொலைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், கடந்த நான்கு மாதங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 1,325 ரெளடிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், பழிவாங்கும் சம்பவங்கள், கொலைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறையில் உள்ள ரெளடிகள் உள்பட சந்தேக நபா்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறாா்கள் என்று அதில் தெரிவித்துள்ளாா் சங்கா் ஜிவால்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின்... மேலும் பார்க்க