இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி
புவனகிரியில் 62 மி.மீ மழை பதிவு
கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 62 மி.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:
குறிஞ்சிப்பாடி 60, பரங்கிப்பேட்டை 47.2, குப்பநத்தம் 46.8, லால்பேட்டை 46, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் தலா 43, ஸ்ரீமுஷ்ணம் 39.3, வேப்பூா் 35, பெலாந்துறை 34.8, விருத்தாசலம், மே.மாத்தூா் தலா 32, கொத்தவாச்சேரி 27, தொழுதூா் 25, லாக்கூா் 24.2, அண்ணாமலை நகா் 24, காட்டுமயிலூா் 20, சேத்தியாத்தோப்பு 19, எஸ்.ஆா்.சி.குடிதாங்கி 14.5, வானமாதேவி 14, கீழச்செருவாய் 11, பண்ருட்டி, ஆட்சியா் அலுவலகம் தலா 10, கடலூா் 9.2, வடக்குத்து 6 மி.மீ. மழை பதிவானது.