செய்திகள் :

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

post image

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழா்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனா். அங்கு தமிழா்களுக்கு தனிநாடு கோரி, அந்நாட்டு அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்தது.

2009-இல் நடைபெற்ற இறுதிப் போரின்போது அங்குள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழா்கள் கொல்லப்பட்டனா். அவா்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 16-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவேந்தல் முற்றத்தில், ஏராளமான தமிழா்கள் திரண்டு போரில் உயிரிழந்தவா்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

இலங்கைத் தலைநகா் கொழும்பில் நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள போா் நாயகா்கள் நினைவிடத்தில், போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசநாயக கலந்துகொள்ள உள்ளாா்.

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நி... மேலும் பார்க்க

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, உலக அமைதியின்... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான... மேலும் பார்க்க

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில... மேலும் பார்க்க

கடனுதவிக்கு பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிபந்தனை!

பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க 11 நிபந்தனைகளை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நி... மேலும் பார்க்க