செய்திகள் :

நாம் தமிழர் நிகழ்ச்சிக்காக கோவை பொருட்காட்சியில் அனுமதி இலவசமா... சீமானின் புகாரும் அரசு விளக்கமும்!

post image

நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழினப் பேரெழுச்சிப் பொது கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், “மே 18 துயரம் மிகுந்த நாள். மே 18-ம் தேதி தமிழக மக்களின் துயர நாள் என்று ஏன் அரசு விடுமுறை அறிவிக்கவில்லை.

சீமான்

ஒரு இனம் தனக்கென எப்போது ஒரு நாடு அடைகிறதோ அப்போதுதான் விடுதலை கிடைக்கும்.  காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக ஆகிய நான்கு பேரும் தமிழ் இனத்தின் பகைவர்கள்.

கோவை மாவட்டத்தில் இன்று மட்டும் ஏன் அரசு பொருட்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கி உள்ளார்கள். இத்தனை நாள்கள் இல்லாமல் இன்றைக்கு அங்கு ஏன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நான் பிரபாகரன் மகன் என்பதால் இப்படி செய்கிறார்கள். “ என்றார்.

கோவை பொருட்காட்சி

இது சமூகவலைதளங்களில் பரபரப்பான விவாத பொருளானது. நாம் தமிழர் கட்சியினர் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கு திமுகவினரும் நாம் தமிழர் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “கோவை அரசு பொருட்காட்சியில் 17வது நாளில் (18.5.2025) நுழைவு கட்டணமாக ரூ.1,61,000 வசூல் செய்யப்பட்டுள்ளது. 9,442 பெரியவர்கள், 1,937 குழந்தைகள் என்று மொத்தம் 11,379 மக்கள் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.

கோவை பொருட்காட்சி

கடந்த 17 நாள்களில் மொத்தம் 1,12,207 மக்கள் பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். இதற்காக  மொத்தம் ரூ.15,79,230 நுழைவு கட்டணம் வசூலாகியுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

'திரும்ப வந்துட்டேனு சொல்லு... 2026 தேர்தலில் தனித்து போட்டி’ - சீமான் அறிவிப்பு

2009 ஆம் ஆண்டு இலங்கையில், தமிழ் ஈழ மக்கள் இனப்படுகொலைச் செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிக... மேலும் பார்க்க

கரூர்: அஜித் பட கிராமம்போல ஒதுக்கப்படுகிறோம்; அடிப்படை வசதி கேட்டு 18 நாட்களாக போராடும் மக்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வரும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புனவாசிப்பட்டி அருகே இருக்கிறது சிந்தலவாடி. இந்த ஊராட்சியில் இருக்கும் காரவனத்தான் கோயில் தெருவில்... மேலும் பார்க்க

Vijay: "தம்பி விஜய் அப்படிக் கூறவில்லையே" - பாஜக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்குத் தமிழிசை பதில்

பாஜக - தவெக கூட்டணி குறித்து முன்னாள் தெலங்கானா ஆளுநர் மற்றும் பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது..."பாஜக உடன் தவெக கூட்டணி இல்லை என்று அந்தக் கட்சியிலிருந்... மேலும் பார்க்க

பாஜக அரசு ஆளுநர்களை பயன்படுத்துகிறது; இணைந்து எதிர்ப்போம் - தழிழக முதல்வர் 8 முதல்வர்களுக்கு கடிதம்

ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால அளவை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து, மத்திய அரசு அளவிலும், தமிழ்நாடு மாநில அரசு அளவிலும் பரபரப்பு பற்றி கொண்... மேலும் பார்க்க

`ED ரெய்டை திசை திருப்புகிறார்கள்' - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறைறையினர் எட்டுமணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினார்கள்.ஆர்.பி.உதயகுமார்அப்போது அங்கு கட்சி நிர்வாக... மேலும் பார்க்க