செய்திகள் :

`ED ரெய்டை திசை திருப்புகிறார்கள்' - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஆர்.பி.உதயகுமார்

post image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறைறையினர் எட்டுமணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

அப்போது அங்கு கட்சி நிர்வாகிகளுடன் வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி வீட்டின் முன் அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு கட்சியில் சிறப்பாக பணியாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி. தற்போது அவர் உடல் நலமில்லாமல் இருந்தாலும் கட்சிப் பணியில் தீவிரமாக பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவின் பணிகளை முடக்குவதற்காக நடத்தப்படும் சோதனையாக இதை நாங்கள் கருதுகிறோம். அடக்குமுறையாலும், சோதனையாலும், கழகப் பணிகளை யாரும் முடக்கிவிட முடியாது என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறியுள்ளார். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுக்கும் அறிக்கையை பார்த்து, பொதுச் செயலாளரின் ஆலோசனைப்படி சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஒருபுறம் டாஸ்மாக ஊழல் சம்பந்தமாக அமலாக்கதுறை ரெய்டு நடக்கிறது. சட்டமன்றம் நடைபெற்றபோது இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது, நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள், அதற்குப் பின் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காகத்தான், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையை பார்க்க முடிகிறது. இவர்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் தொடர் சோதனை என புரிந்துகொள்ள முடிகிறது.

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கும் பணிகளை 90 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம். இது போன்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளால், அதிமுகவின் பணிகளைத் தடுக்கமுடியாது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்

சசி தரூர் விவகாரம்; `பாஜக அரசு சிறப்பாக நாரதர் முனி அரசியலைச் செய்கிறது' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் இந்திய அரசு அனைத்துக்கட்சிகளின் குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதற்காக 7 கட்சிகளின் எம்.பி... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் நகரில் தீயணைப்புத் துறைக்குப் புதிய கட்டிடம் ரூ 2,50,00,000 மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்தப் பூமி பூஜையை அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்... மேலும் பார்க்க

'இதை அரசியலாகப் பார்க்கவில்லை' வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்றது பற்றி சசிதரூர் எம்.பி கருத்து

7 எம்.பி-க்கள் அடங்கிய குழு:ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அடுத்த வாரம் அனைத்துக்கட்சி குழு புறப்படுகிறது. அதற்காக அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஏழு எம... மேலும் பார்க்க

"யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?" - அதிமுக கேள்வி

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முந்தினம் (மே 16), டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (MD) விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டுக்குள் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதோடு, மேலும் விசாரணைக்கு விசாகனனை தங்... மேலும் பார்க்க