செய்திகள் :

விராட் கோலிக்காக சின்னசாமி திடலை வெண்மையாக்கிய ரசிகர்கள் ஏமாற்றம்!

post image

பெங்களூரு ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல் குறித்து ஐபிஎல் நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 58-ஆவது போட்டி நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி திடலில் ஆர்சிபி-கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.

இந்தப் போட்டிக்காக விராட் கோலி ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்ஸிக்களை அணிந்து வந்தார்கள்.

சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனால், கோலியை கௌரவிக்கும் பொறுட்டு வழக்கமான ஆர்சிபியின் சிவப்பு நிற ஜெர்ஸியை அணியாமல் வெள்ளை நிறத்தில் அணிந்து வந்தார்கள்.

ரசிகர்கள் கோலியின் ஆட்டத்தை பார்க்க மிகுந்த ஆவலில் இருந்தார்கள். ஆனால், மழைக் குறுக்கிட்டதால் டாஸ் சுண்டப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் சின்னசாமி திடலை விட்டுச் சென்றார்கள்.

சின்னசாமி திடலை வெண்மை நிறமாக்கிய ஆர்சிபி ரசிகர்களின் அன்பை விடியோவாக வெளியிட்டு ஐபிஎல் நிர்வாகம் பதிவிட்டுள்ளது. இந்த விடியோவை ஆர்சிபி, கோலி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டதால் கேகேஆர் தொடரிலிருந்து வெளியேறியதும், ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே டக்கவுட்டான மிட்செல் ஓவன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியவர் ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில்... மேலும் பார்க்க

பஞ்சாப் பேட்டிங்: மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக விளையாடம் இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும்... மேலும் பார்க்க

டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ்..! வைரலாகும் விடியோ!

குஜராத் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி போலவே பேட்டிங் செய்த சிராஜ் விடியோ வைரலாகி வருகிறது.ஐபிஎல் 18-ஆவது சீசனில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை. இருப்பினும்... மேலும் பார்க்க

இது நடந்தால் யாருமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற முடியாது..! அதிகரிக்கும் சுவாரசியங்கள்!

ஐபிஎல் 2025 போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. போர்ப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட போட்டிகள் நேற்று (மே.17) முதல் தொடங்கப்பட்டன. மழையின் காரணமாக ஆர்சிபி, கேகேஆர் போட்டிகள் கைவிடப்பட்டது. இதனால், நடப்ப... மேலும் பார்க்க

ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும்: நானும் உடனிருப்பேன் -ஏபி டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கோப்பையை விராட் கோலியுடன் கைகோர்த்து தூக்குவேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானுடனான தீவிர போர்ப் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட... மேலும் பார்க்க

ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம்!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ... மேலும் பார்க்க