செய்திகள் :

ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும்: நானும் உடனிருப்பேன் -ஏபி டி வில்லியர்ஸ்

post image

ஐபிஎல் கோப்பையை விராட் கோலியுடன் கைகோர்த்து தூக்குவேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானுடனான தீவிர போர்ப் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்றிரவிலிருந்து(மே 17) மீண்டும் நடைபெறுகின்றன. புதிய அட்டவணைப்படி போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் களம் காணுகின்றன. புள்ளிகள் பட்டியலில் 2-ஆம் இடத்திலிருக்கும் பெங்களூரு, இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் கட்டத்துக்குத் தகுதிபெற்றுவிடும். மறுபுறம், கொல்கத்தா தோற்கும் நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.

இந்தநிலையில், ‘இறுதிப்போட்டியன்று விராட் கோலியுடன் நானும் கை கோர்த்துக்கொண்டு ஐபிஎல் கோப்பையை உச்சி நுகருவேன்’ என்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அவர் பேசியிருப்பதாவது: “ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால், அந்த அணி வீரர்களுடன் நானும் விளையாட்டுத் திடலில் இருப்பேன்.

விராட் உடன் இணைந்து கோப்பையை தூக்குவதைவிட இன்பமளிக்கும் ஒரு விஷயம் எனக்கு வேறெதுவும் இல்லை. நாங்கள்(விராட் கோலி, டிவில்லியர்ஸ்) கோப்பையை வெல்ல பல ஆண்டுகள் முயற்சித்தோம்” என்று பேசியுள்ளார் டி வில்லியர்ஸ்.

ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம்!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்த டு பிளெஸ்ஸிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!

ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் விளையாடுவதற்காக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக தற்காலிக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இல் அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை..! முன்னாள் வீரர் பேட்டி!

பிளே ஆஃப்ஸுக்கான போராட்டம் தீவிரமடைவது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும்... மேலும் பார்க்க

சிஎஸ்கே ரசிகையை சீண்டிய ஆர்சிபி ரசிகர்கள்: ராபின் உத்தப்பா கண்டனம்

ஆர்சிபி ரசிகர்களின் மோசமான செயல்கள் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியது சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் சண்டைகள் நிகழ்ந்த... மேலும் பார்க்க

ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா

இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும் இன்றுமுதல் (மே.17) தொடங்குகின்றன.போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தின... மேலும் பார்க்க

மீதமுள்ள போட்டிகளுக்கான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை: கேகேஆர் வீரர்

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபி... மேலும் பார்க்க