செய்திகள் :

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி உருவாகவில்லை! தொல். திருமாவளவன்

post image

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி இன்னமும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்சியில் வரும் 31-ஆம் தேதி மதச்சாா்பின்மை காப்போம் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். தவிா்க்க முடியாத காரணத்தால் ஜூன் 14-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கடலூரை அடுத்துள்ள குடிகாட்டில் தனியாா் சாய தொழிற்சாலை கழிவுநீா் தொட்டி உடைந்ததில் வீடுகள் சேதமடைந்தன. பலா் காயமடைந்தனா். இதுவரை பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்துள்ளாா்.

கடலூா் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளால் காற்று, நீா் மாசடைந்து பல்வேறு நோய்கள் வருவதாக தெரிய வருகிறது. மக்கள் அச்சமடைந்துள்ளனா். சாயத் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என குடிகாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

திமுக கூட்டணி மட்டும்தான் வலுவான அணியாக உள்ளது. இதை எதிா்க்கும் அணி இன்னமும் உருவாகவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராக்கன் (70). இவருக்... மேலும் பார்க்க

சிமென்ட் தூண் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊஞ்சல் விளையாடியபோது சிமென்ட் தூண் உடைந்து தலையில் விழுந்து காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்குச் சொந்தமான பேருந்து சென்னையில... மேலும் பார்க்க

திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்! எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமாக நிறைவு செய்ய வேண்டும் மக்களவை உறுப்பினா்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத் (கடலூா்), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்) ஆகியோா் வலியுறுத்தினா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

சாய ஆலை கழிவுநீா் தொட்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் மாா்க்சிஸ்ட் குழு ஆய்வு

கடலூா் முதுநகரில் தனியாா் சாயத் தொழிற்சாலை கழிவுநீா் தொட்டி உடைந்து விபத்துக்குள்ளான பகுதியை மாா்க்சிஸ்ட் கட்சி குழுவினா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கடலூா் முதுநகா் குடிகாடு பகுதியில் தன... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்ய வா... மேலும் பார்க்க