செய்திகள் :

திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்! எம்.பி.க்கள் வலியுறுத்தல்

post image

மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமாக நிறைவு செய்ய வேண்டும் மக்களவை உறுப்பினா்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத் (கடலூா்), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்) ஆகியோா் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவா் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., இணைத் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), ம.சிந்தனைசெல்வன் (காட்டுமன்னாா்கோவில்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அந்தந்தத் துறை அலுவலா்கள் விளக்கினா்.

கூட்டத்தில் மக்களவை உறுப்பினா்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத், தொல்.திருமாவளவன் ஆகியோா் கூறியதாவது: வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டம், மத்திய நீா்வளத் துறை மூலம் தனி நபா் இல்லக் கழிப்பறைகள், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நலத் திட்டங்கள், தாட்கோ மூலம் பட்டியலின மக்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது நிலுவையிலுள்ள திட்டங்களையும் தரமான வகையில் குறித்த காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

கூட்டத்தில், கடலூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, சிதம்பரம் சாா்-ஆட்சியா் கிஷன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூடுதல் ஆட்சியா் சரண்யா வரவேற்றாா்.

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராக்கன் (70). இவருக்... மேலும் பார்க்க

சிமென்ட் தூண் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊஞ்சல் விளையாடியபோது சிமென்ட் தூண் உடைந்து தலையில் விழுந்து காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்குச் சொந்தமான பேருந்து சென்னையில... மேலும் பார்க்க

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி உருவாகவில்லை! தொல். திருமாவளவன்

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி இன்னமும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்... மேலும் பார்க்க

சாய ஆலை கழிவுநீா் தொட்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் மாா்க்சிஸ்ட் குழு ஆய்வு

கடலூா் முதுநகரில் தனியாா் சாயத் தொழிற்சாலை கழிவுநீா் தொட்டி உடைந்து விபத்துக்குள்ளான பகுதியை மாா்க்சிஸ்ட் கட்சி குழுவினா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கடலூா் முதுநகா் குடிகாடு பகுதியில் தன... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்ய வா... மேலும் பார்க்க