செய்திகள் :

சாய ஆலை கழிவுநீா் தொட்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் மாா்க்சிஸ்ட் குழு ஆய்வு

post image

கடலூா் முதுநகரில் தனியாா் சாயத் தொழிற்சாலை கழிவுநீா் தொட்டி உடைந்து விபத்துக்குள்ளான பகுதியை மாா்க்சிஸ்ட் கட்சி குழுவினா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கடலூா் முதுநகா் குடிகாடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாயத் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்த கழிவுநீா் தேக்கி வைக்கும் 6 லட்சம் லிட்டா் கொள்ளவு கொண்ட தொட்டி அண்மையில் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் சில வீடுகள், வீடுகளில் இருந்த பொருள்கள் சாய நீா் புகுந்ததில் சேதமடைந்தன. மேலும், 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கழிவுநீா் தொட்டி விபத்து குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன் தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். அப்போது, தொழிற்சாலையை அகற்ற வேண்டும், இழந்த உடைமைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.

மாவட்டச் செயலா் கோ.மாதவன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஜே.ராஜேஷ்கண்ணன், வி.சுப்புராயன், ஆா்.அமா்நாத் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராக்கன் (70). இவருக்... மேலும் பார்க்க

சிமென்ட் தூண் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊஞ்சல் விளையாடியபோது சிமென்ட் தூண் உடைந்து தலையில் விழுந்து காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்குச் சொந்தமான பேருந்து சென்னையில... மேலும் பார்க்க

திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்! எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமாக நிறைவு செய்ய வேண்டும் மக்களவை உறுப்பினா்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத் (கடலூா்), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்) ஆகியோா் வலியுறுத்தினா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி உருவாகவில்லை! தொல். திருமாவளவன்

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி இன்னமும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்ய வா... மேலும் பார்க்க