செய்திகள் :

விராட் கோலிக்கு பாரத ரத்னா? `சின்ன தல’ கோரிக்கை!

post image

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் அறிவித்த நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சனிக்கிழமையில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது, இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியின் பங்களிப்புக்கு, உரிய அங்கீகாரத்துடன் அவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்; விருதுக்கு அவர் தகுதியானவரே என்று தெரிவித்தார்.

இதுவரையில், பாரத ரத்னா விருதைப் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஓராண்டு கழித்து, 2014-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பாரத ரத்னா விருதைப் பெற்றார். தற்போது, விராட் கோலிக்கும் பாரத ரத்னா வழங்குமாறு சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார். விராட் கோலி, 2013-ல் அர்ஜுனா விருது, 2017-ல் பத்மஸ்ரீ விருது, 2018-ல் கேல் ரத்னா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த 36 வயதான விராட் கோலி, கடந்தாண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். கோலியின் தலைமையில், இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருந்தது.

டெஸ்ட் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தது விராட் கோலிதான் என்ற பெருமையையும் அவர் வைத்துள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9,230 ரன்கள் குவித்துள்ளார். விரைவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என்று இவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு

திரைப்பட படப்பிடிப்புகளைத் துருக்கி, அஜர் பைஜானில் நடத்த வேண்டாம் என இந்தியத் திரைப்பட அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதனால், எல... மேலும் பார்க்க

தமிழ் - தெலுங்கில் உருவாகும் மணிரத்னம் புதிய படம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை... மேலும் பார்க்க

மஞ்ஞுமெல் பாய்ஸ் நாயகனின் ஆசாதி ரிலீஸ் தேதி!

நடிகர் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் உருவாகியுள்ள ஆசாதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமானவர் ஸ்ரீநாத் பாசி. ஆனால், அதற்கு முன்னமே கும்பாலாங்கி ... மேலும் பார்க்க

அடுத்தப்பட வாய்ப்புக்கு புகழ் தேவைப்படுகிறது: ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சினிமாவில் புகழோடு இருப்பது குறித்து பேசியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழிலும் நல்ல நடிகையாக உருவெடுத்துள்ளார். கதையம்சமுள்ள தமிழ்ப் படங்கள... மேலும் பார்க்க

எனக்கு நிறைய வேலை இருக்கு... விஜய்யின் அரசியல் கேள்விக்கு சூரி பதில்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பான கேள்விக்கு சூரி பதிலளித்துள்ளார். நடிகர் சூரி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கூட்டணியில் உருவான மாமன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது... மேலும் பார்க்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா: பூமி பூஜையுடன் தொடங்கியது!

திருச்செந்தூர்: ஜுலை 7ல் மகா கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை முகூர்த்தக் கால் நடும் விழா நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ஆர... மேலும் பார்க்க