செய்திகள் :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா: பூமி பூஜையுடன் தொடங்கியது!

post image

திருச்செந்தூர்: ஜுலை 7ல் மகா கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை முகூர்த்தக் கால் நடும் விழா நடந்தது.

இதில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், தக்கார் ரா. அருள்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கோயிலில் வருகின்ற ஜுலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக திருப்பணி வேகமாக நடந்து வருகிறது.

கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் மூலவரான சுப்பிரமணியருக்கு திருக்கோயில் உள் பிரகாரத்திலும், சுவாமி சண்முகருக்கு கோயில் கிரி பிரகாரத்தில் ராஜகோபுரம் மேல வாசல் அருகே உள்ள இடத்திலும் யாகசாலை அமைக்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகருக்கு யாகசாலைகள் அமைப்பதற்காக பூமி பூஜை மற்றும் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.

ராஜகோபுரம் மேல வாசல் அருகே யாகசாலை அமைக்கப்பட உள்ள இடத்தில் விநாயகர் பூஜைகள், புண்ணியாவாஜனம் மற்றும் பூமி பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், திருக்கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் முகூர்த்தக் கால் நட்டினர்.

முன்னதாக அறநிலையத் துறை ஆகம வல்லுனர் குழுவைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆகம வல்லுனர் குழு செல்வம் பட்டர், திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் ரோகிணி, அஜித், வெங்கடேசன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் சு. ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதையும் படிக்க: திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா!

விக்ரம் டிரைலர் சாதனையை முறியடித்த தக் லைஃப் டிரைலர்!

தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் நேற்று (மே. 17) வெளியானது.இந்த டிரைலரில் த... மேலும் பார்க்க

மண்டோதரியாக காஜல் அகர்வால்!

ராமாயணம் திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது ராமாயணம் படத்தை இயக்கிவருகிறார... மேலும் பார்க்க

லீக் 1 தொடர்: 13-ஆவது முறையாக சாம்பியனான பிஎஸ்ஜி!

லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.பாரிஸ் செயின்ட் ஜெர்மன் எனப்படும் பிஎஸ்ஜி கால்பந்து அணி லீக் 1 கால்பந்து தொடரின் கடைசி போட்டியில் ஆக்செர்ரே உடன் மோதியது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு

திரைப்பட படப்பிடிப்புகளைத் துருக்கி, அஜர் பைஜானில் நடத்த வேண்டாம் என இந்தியத் திரைப்பட அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதனால், எல... மேலும் பார்க்க

தமிழ் - தெலுங்கில் உருவாகும் மணிரத்னம் புதிய படம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை... மேலும் பார்க்க

மஞ்ஞுமெல் பாய்ஸ் நாயகனின் ஆசாதி ரிலீஸ் தேதி!

நடிகர் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் உருவாகியுள்ள ஆசாதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமானவர் ஸ்ரீநாத் பாசி. ஆனால், அதற்கு முன்னமே கும்பாலாங்கி ... மேலும் பார்க்க