செய்திகள் :

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தம்? டிரம்ப் மத்தியஸ்தம்!

post image

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர், 1,179-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபடவிருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

போரை நிறுத்தும் முயற்சியாக, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமையில் (மே 19) விவாதிக்கவிருப்பதாக ரஷிய ராணுவத் தலைமையகம் தெரிவித்தது. தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடனும் டிரம்ப் பேசவுள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கு அமெரிக்காதான் காரணமாக இருக்கும்நிலையில், காரணமானவரே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்தியா - பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்துவைத்ததாக பொய்யான தம்பட்டம் கூறி வரும்நிலையில், தற்போது உக்ரைன் போருக்கும் தற்பெருமை சூடவுள்ளாரா டிரம்ப்? என்றும் விமர்சனங்கள் பரவி வருகின்றன.

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான 3 ஆண்டுகளுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா உள்பட வேறுசில நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மே 15 ஆம் தேதியில், துருக்கியில் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த, இருநாட்டு பிரதிநிதிகளும் முதன்முறையாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிவடைந்தது. இதனிடையே, சனிக்கிழமையில் உக்ரைன் மீது ரஷியா, இதுவரையில் இல்லாத அளவில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதலையும் நடத்தியது.

இதையும் படிக்க:யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

வடக்கு காஸாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் மூடல்!

காஸாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையும் இஸ்ரேல் ராணுவ கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கும் மருத்துவ சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

திபெத், ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

திபெத், ஆப்கனில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. திபெத்தில் ரிக்டர் அளவில் 3.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீட... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலைய... மேலும் பார்க்க

நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் 2 பேர் பலியானார்கள். உலகளாவிய நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் சனிக்கிழமை இரவு நியூ... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித... மேலும் பார்க்க