அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரி...
காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்
காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தங்களிடம் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
‘கிதியோனின் தோ்கள் நடவடிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தரைவழித் தாக்குதலை, ராணுவம் தனது மிகப் பெரிய பலத்தைப் பயன்படுத்தி நடத்திவருகிறது என்றாா் அவா்.முன்னதாக, காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது நினைவுகூரத்தக்கது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவது, இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பது ஆகிய இஸ்ரேலின் நோக்கங்களை அடையும் நோக்கில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அப்போது இஸ்ரேல் அதிகாரிகள் கூறினா்.இந்தத் திட்டத்தின் கீழ், காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் காலவரையின்றி இஸ்ரேல் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று அப்போது அவா்கள் கூறினா்.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் தற்போது தீவிர தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது காஸாவை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்த தரைவழித் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னதாக காஸா முழுவதும் இஸ்ரேல் படையினா் கடந்த 2 நாள்களில் நடத்திய தாக்குதலில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.காஸாவை சுமாா் 38 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், அங்கு வன்முறையில் தங்கள் வீரா்களின் உயிரிழப்பு அதிகமானதாலும், பாலஸ்தீனா்களைப் மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ‘யூதா்களுக்கான நாடு’ என்ற நிலைக்கு அது எதிரானது என்பதாலும் அங்கிருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.அதன் பிறகு காஸாவில் தோ்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் தொடா்ந்துவந்த மோதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியா்கள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
இந்தச் சூழலில், இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா பகுதியை மீண்டும் கைப்பற்றும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.